$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

தலையங்கம்

வணக்கம்,

தமிழில் நவீன கவிதை எழுச்சியுற்று ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நவீன கவிதை பல்வேறு பரிமாணங்களையும் மாற்றங்களையும்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் பல எதிர்ப்புக்களையும் கிண்டல்களையும் சந்தித்த நவீன கவிதை இன்று தன்னை தமிழ்க் கவிதை மரபின் இன்னோர் வடிவமாக நிலைநிறுத்தியுள்ளது.

மறுபாதியின் இந்த இதழ் நவீன கவி தையின் ஐம்பதாண்டு காலத்தை நினை விற் கொண்டு வெளிவருகின்றது. ஈழத் தில் வரதராலும் இந்தியாவில் ந.பிச்ச மூர்த்தியாலும் முதன் முதலில் எழுதப்பட் டனவாகக் கொள்ளப்படும் கவிதை களைத் தமிழ் நவீன கவிதையின் தொடக்க அடையாளமாகக் கருதி மீள் பிர சுரம் செய்திருக்கின்றது.

நவீன தமிழ்க் கவிதை இயக்கத்தின் முன்னோடிகளை மறுபாதி நினைவிற் கொள்வதோடு தமிழ் நவீன கவிதைக்கு அவர்கள் ஆற்றிய பணியையும் பங்கை யும் மதித்து நிற்கின்றது.

நவீன தமிழ் கவிதை இனிவரும் காலங்களிலும் மாறுதல்களையும் வடி வச் செம்மையையும் பெற்று வளர்ச்சியுற வேண்டும் என்பதையே மறுபாதி விரும்பு கிறது. அதற்கான களத்தை விரிவுபடுத்தவும் விமர் சனபூர்வமான வளர்ச்சிப் போக்கை ஏற்படுத்தவும் தயாராகவே உள்ளது என்பதை படைப்பாளிகள், விமர்ச கர்கள், வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஆசிரியர்

தலையங்கம் தலையங்கம் Reviewed by மறுபாதி on 9:14 AM Rating: 5

No comments:

Powered by Blogger.