$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

வாழக்கொடுத்த வழி


சி.ஜெயசங்கர்

எழுத முடியாத கவிதைகள்
இரைந்தெழுந்த பேரலைகள்
நெஞ்சக் கனகடலில் சுழன்டிக்க

முகங்கள் சலனமற்றுச் சாந்தமாய்
கண்கள் சிவப்பேறாப் பளிங்குகளாய்
வார்த்தைகள் கொதிப்பற்று
துயரற்று
எதுவுமே அற்று

அசாதாரணங்களை உள்ளமிழ்த்தி
சாதாரணமாய்
வெகு சாதாரணமாய்
பொய்யுக்கும் புரட்டுக்கும்
தாளமிட்டு வாழக்கொடுத்த வழி
என்செய்வோம் சொல்
0
வாழக்கொடுத்த வழி வாழக்கொடுத்த வழி Reviewed by மறுபாதி on 10:46 AM Rating: 5

No comments:

Powered by Blogger.