$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

விமலாதாஸ் கவிதைகள்


விமலாதாஸ்

இதிக்கடன்
தலைசாய்த்து
நித்தமும் உறங்கிய
அகனற் உன் மார்பின்
எலும்புகளை ஒன்றுவிடாமல்
பொறுக்கி
என் மடிமீது வைத்து
நீயிருந்த ஆசனத்தே நானமர்ந்தேன்

பயணித்த வழியெல்லாம்
நம் வாழ்வின் வசந்தங்களையும் கனவுகளையும்
வழித்தெடுத்து
சேர்த்துக் கொட்டினேன்
நம் கட்டிலில்
0

இனி

அச்சம் இல்லை
அவலம் இல்லை
அந்தரித்தல் இல்லை
மூச்சுத்திணறுதல் இல்லை
முனகும் ஒலியின் வாதை இல்லை

தூக்கத்தில் விழிக்கும் தேவை இருக்காது
கசியும் கண்களில் ஈரம் இருக்காது
கரைந்தாலும் கேட்க ஆளிருக்காது
அழைக்கும் குரலுக்கு
அடுத்தகுரல் இருக்காது

காலையில் விழித்தால் காலியான அறை
வீட்டை நிறைத்த வெறுமை
அலையடங்கிய கடலாயானது மனது
விமலாதாஸ் கவிதைகள் விமலாதாஸ் கவிதைகள் Reviewed by மறுபாதி on 10:02 AM Rating: 5

No comments:

Powered by Blogger.