$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

தொலைவில் ஒரு வீடு

திவ்வியாவின் பக்கங்கள்


மிகச்சுருக்கமாக இலக்கியம் தொடர்பான எனது பார்வையை நிர்ணயத்துக் கொள்ள விரும்புகின்றேன். கலைகள் தமக்கான ஒரு படைப்புடலை உடையனவென்ற வகையில், சொற்களால் முடையப்பட்ட ஒரு படைப்புடலில் அல்லது சொல்லுடலில் சொற்கள் பாவிப்படிந்தவொரு நிலவுருவாக, சொற்களின் நிலப்பரப்பாக இலக்கியங்கள் காணப்படுகின்றன. அடிப்படையில் சொற்களால், ஆனால் ஒரு வகையில் சொற்களுக்கப்பால் திறக்கப்பட்ட படைப்பு வெளியில் அவை வசிக்கின்றன. சோற்கள் நடமாடும் அல்லது விநியோகக்கப்படும் முறையால் அவற்றைக் கவிதை என்றும் சிறுகதை, நாவல் என்றும் அழைக்கின்றோம். சிலவேளை இந்த வடிவ நிர்ணயங்களை ஊடத்து மேவிக்கலந்த கலப்பொருமையுடைய படைப்புடலிலும் அவை வசிக்கின்றன. எல்லையற்ற திறந்த முடிவற்ற வாசித்தலுக்காக, அர்த்தங்களை இடைவிடாது உற்பத்தி செய்து, அழத்து மீள உற்பத்தி செய்தலுக்கான சாத்தியமுடைய வெளியாக இருத்த லென்பதே இலக்கியப் படைப்பொன்றின் அடிப்படையாகும்.
இன்னும் சற்றே இதனை விரித்துப் பேசலாம். இலக்கியம் நாம் பேசும் மொழியில் இருந்துதான் உருவாகின்றது எனினும் அது அந்தப்பொது மொழிக்குள் ஒரு தனி மொழியாகும் என்பதுவே இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும். இலக்கியம் இந்தப் பொதுமொழிப் பிராந்தியத்தினுள் அல்லது மொழிக்கிடங்கனுள் இருந்து சொற்களை எடுது;துக் கொண்டாலும் அதனை அடுக்கும் அல்லது பின்னும் அல்லது உருக்கி வார்க்கும் முறை வேறானது. ஆகவே, அது எமது நாளாந்த பேச்சு அல்லது சொற் கோர்வை என்பற்வறில் இருந்தும், அhத்தததினை பரிமாறும் அல்லது எடுத்துக் கூறும் முறையில் இருந்தும் அதிகமதிகம் வேறுபட்டது. அடிப்படையில் அவற்றில் அர்த்தங்களும் அனுபவங்களும் அகராதிக்குள் வசிப்பதில்லை. அதனால்த்தான் புகழ்பெற்ற படைப்பாளியான ரி.எஸ்.எலியட் இலக்கிய வடிவங்களில் ஒன்றான கவிதை பற்றி எழுதும்போது கவிதையின் அர்த்தம் என்பது நாம் சொல்லும் சொற் பொருளுக்குள் வசப்படாமலே இருக்கிறது என்கிறார்.
எனவேதான் சொல்லின் நிர்ணயிக்கப்பட்ட பொருளை அறிவதால் அல்லது அகராதியில் இருந்து குறித்;த சொற்பொருளை வெளியெடுப்பதால் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாதென்கிறார்கள்.
உண்மையில் இலக்கியம் அகராதியில் பதிக்கப்பட்டுள்ள நிர்ணயகரமான அர்த்தங்கள் மீதான சவாலாகவே அடிப்படையில் காணப்படுகன்து. அது முடிந்த முடிவான அர்த்தங்களைக் குலைப்பதாயும் மாற்றி அமைப்பதாயும் புதிது புனைவதாயும் காணப்படுகின்றது. அவை அர்த்தங்களின் பல்லடுக்காய் காணப்படுகின்றன. அதனால்த்தான் புகழ்பெற்ற இன்னொரு கவிஞரான ஆற்றூர் ரவிவர்மா இலக்கியப் படைப்புக்கள் மொழியின் எல்லைகளை எல்லையினறி; அதிகரிப்பதாகக் கூறுகிறார்.
வேறொரு விதமாகக் கூறினால், குறிப்பீட்டின் (அர்த்தம்) உறை நிலையை உடைத்து, முடிவற்ற அர்த்தங்களின் உபத்திக்கான வாயில்களை முடிவின்த் திறந்து செல்லும் உயிராற்றலே இலக்கியததின் அடிப்படையாகின்றது. இந்தச் சுட்டுப் பொருளின் முடிவற்ற பயணங்களிற்கான சாத்தியமே இலக்கயச் சொற்களின் அடிப்படையாகும். அது ஒருவகையில் சொற்களின் பொருள் தொக்கு (உழnயெவயவழைn) நிலையாகும்.
இது சொற்களின் நேர்பொருள் (னநழெவயவழைn) அல்லது அபிதாவிலிருந்து கிளைத்தாலும் அது சொல்லின் பொருள்கோடு நிலையின் மிகமிக ஆரம்பப் புள்ளி மட்டுமே. அதனால்த்தான் சமகாலத் தமிழின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான ஜெயமோகன் மனத்தின் ஒரு பகுதி எழுத்தினைப்படித்தபடி செல்ல மனத்தின் வேறொரு பகுதி புழக்க மொழிக்கு அப்பால் மறை முகமாக இயங்கும் வேறொரு மொழியைப் படித்துச் செல்கிறது என்ற சாரப்பட எழுதுகிறார்.
இந்தப் பின்னணியில் இருந்து சமஸ்கிருத அழகியலாளர்களுள் ஒருவரான ஆனந்தவர்த்தனர் சொற்களின் இந்த மேலுந்துகை நிலை அல்லது அதன் பொதுத் தோற்றத்;திற்கு அப்பாலேயே இலக்கிய மொழியின் அடித்தளம் இருப்பதாக இனங்காண்கிறார். அதனை ‘த்வனி’ எனப் பெயரிடும் அவர், காவியத்தின் ஆன்மா த்வனியே என்று பிரகடனம் செய்கிறார். இந்தத் தொக்கு பொருள் அல்லது புழக்கமொழிக்கு அப்பால் அதிலிருந்து செட்டை விரிக்கும் பொருள்கள் அவற்றிற்கேயான அகவயத்தர்க்கங்களை உடையன. இவற்றை அழகியற் தர்க்கம் அல்லது கவித்துவத்தர்க்கம் என அழைக்க விரும்புகின்றேன். இவை அடிப்படையில் அதர்க்கங்களின் தர்க்கமாக உள்ளன. புpரியத்திற்குரிய நண்பன் அகிலன் எழுதியது போல இலக்கியங்கள் சொல்லால் சொல் ‘களை’யும் ஒருவகை வித்தையாக உள்ளன
0
தொலைவில் ஒரு வீடு தொலைவில் ஒரு வீடு Reviewed by மறுபாதி on 10:19 AM Rating: 5

No comments:

Powered by Blogger.