$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

பசியோடிருப்பவனின் அழைப்பு

சித்தாந்தன்

மலைகளைப் பகிர்ந்துண்ண

அழைத்தாய்

ஆயிரமாயிரம் வெள்ளிகளைச் சூடிய வானம்

கடல் அலைகளில் தத்தளித்துக்கொண்டிருந்தது

மீண்டும் மீண்டும் அழைத்தாய்

காற்று மர இலைகளில் ஒளித்துக் கிடந்தது

இரவு பனித்துளியாய்

புல் நுனிகளில் தேங்கி வழிந்தது

முதலில்

மலைகளை உண்ணும் நுட்பங்களைப் போதித்தாய்

பிறகு

மலைகளின் சுவை பற்றிய பாடல்களை

இசைத்துக் காட்டினாய்

மழைப் பொழிவுகளுக்குள்

மலைகள் வளரும் அதிசயங்களை

வசியச் சொற்களில் சொன்னாய்

மலைகள் தீர்ந்துபோகும் ஒருநாள் வருமெனில்

அப்போது

மலைகளைத் தின்று மலைகளாகிய நாம்

நம்மையே பகிர்ந்துண்டு

பசியாறலாம் என்றாய்

பசியோடிருப்பவனின் அழைப்பு பசியோடிருப்பவனின் அழைப்பு Reviewed by மறுபாதி on 10:20 AM Rating: 5

No comments:

Powered by Blogger.