$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

சிதறுண்ட காலக் கடிகாரம்

தானா விஷ்ணு


முக்காடு போட்ட வயோதிபன்
உன்னிடம் வருகையில்
உபயோகமற்ற பொருளின் ஞாபகம்
உனக்கு வரக் கூடும்.
உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போல
மிக அவதானமாக அவனையும்,அவன் ஞாபகங்களையும்
உன்னிடமிருந்து அகற்ற முனைகிறாய்

ஒளி மிகு உலகத்தை
உனக்குப் பரிசளித்த அந்த வயோதிபன்
தெருவோரத்தில் அல்லது ஆலமரத்தின் கீழ்
முடங்கிப்படுக்கையில்
பல வர்ணங்களிலான இந்த உலகம்
மெல்ல மெல்ல உருகிச் சிதைவதனை
நீ காணத் தலைப்படுவாய்

வாழ்வின் அர்த்தங்களை
அர்த்தங்களின் வர்ணங்களை
குழைத்துத் தந்த வயோதிபனின்
காலக் கடிகாரம்
சிதறுண்டு கிடக்கும் மெளன வெளியில்
கொத்தும் அலகுகளைத் தீட்டியபடி
ஒரு மரங்கொத்தி சிறகசைக்க
எப்படி அனுமதிக்க முடிகிறது உன்னால்.
சிதறுண்ட காலக் கடிகாரம் சிதறுண்ட காலக் கடிகாரம் Reviewed by மறுபாதி on 9:45 AM Rating: 5

No comments:

Powered by Blogger.