$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

பழுதாய்ப்போன கனவுகள்


கோகுலராகவன்


ஒரு இழிவுப் புள்ளியில்
என் பறவைகள்
தம் சிறகுகளை இழந்தன
ஒருபாடல் தன் மெட்டை இழந்தது
குரல்கட்டிக் கிடக்கின்றான்
ஒரு கூத்தாடி

ஆயிரம் பறவைகள் பயம் கொண்டு
எழுந்தோடிச் சகதியில் மாண்டன
எனது
வஸீகரப் புன்னகையை
இக் கணத்தினில் இழந்தேன்

இடித்து விட்டு வெறும்
குலுக்கலுடன் போகின்றன
நீண்ட பாரவ+ர்திகள்

தாமரைக் குளத்தருகல்
என் வீட்டுக் கணற்றடியில்
பற்றி எரிகின்றன
அழகிய சிட்டுக்குருவிகளின் கூடுகள்

வெறும் விழி மெல்லும்
பழுதாய்ப் போன
கனவுகளின் ரீங்காரம்
ஒரு மரங்கொத்தி போல
காலங்களை நெடுகலும்
கொத்திக்கொண்டே இருக்கின்றது
பழுதாய்ப்போன கனவுகள் பழுதாய்ப்போன கனவுகள் Reviewed by மறுபாதி on 9:52 AM Rating: 5

No comments:

Powered by Blogger.