$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

நச்சுமரம்

ஆங்கலமூலம் - வில்லியம் பிளேக்


தமிழில் - க.சத்தியதாசன்

நான் எனது நண்பனுடன் கோபம் கொண்டிருந்தேன்
அதை வெளிக்காட்டினேன் அது முடிவுக்கு வந்தது.
நான் எதிரியுடன் கொண்டிருந்த கோபத்தை
மறைத்து வைத்தேன் அது வளர்ந்தது.

எனது அச்சத்தால் அதற்கு கண்ணீரைக் கொண்டு
இரவுபகலாய் நீர் ஊற்றினேன்
வஞ்சக தந்திரங்களாலும் புன்னகைகளாலும்
ஒளி தந்தேன்

பளபளக்கும் கனி ஒன்i
அது ஏந்தும் காலம் வரை
இரவு பகலாய் அது வளர்ந்தது
ஒளிமிகுந்த அக்கனியை
எதிரிகண்டான்
அது என்னுடையதென
அறிந்து கொண்டான்

இரவு திரையிட்டிருந்த
நாளொன்றில் என் தோட்டத்தில்
திருட்டு நிகழ்ந்தது.
காலையில் நான் கண்டு மகிழ்ந்தேன்
அம் மரத்தின் கீழ் இறந்து கிடந்த
என் எதிரியை
0
நச்சுமரம் நச்சுமரம் Reviewed by மறுபாதி on 10:47 AM Rating: 5

No comments:

Powered by Blogger.