$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

புனிதத்துக்குள் கட்டுறுறும் அபத்தத்தின் முகம்

வெள்ளை மாரனார்
...............................................................
மானிடக் குரலுக்கு அப்பாற்பட்டு இலக்கிய பிரதி என்னும் நிலையைக் கடந்து அதி உன்னத சிருஷ்டியாக கட்டமைக்கப்பட்ட திருமுறைகள் பாடு பொருளாலும் பாடப்பட்டோர் இயல்பாலும் தொகுக்கப் பட்ட முறைமையாலும் மதிப்பு வாய்ந்த புனிதத்; தொகுப்புக்களாகத்; தம்மைத் தகவமைத்துக் கொண்டன. அதியுயர் மீ தன்மைப் புனிதங்கள் யதாhத்தத்திற்கு அப்பாற்பட்டவை. இயல்பை மீறி மத இயக்கங்களுக்கூடாக கட்டமைக்கப்பட்ட இப் புனிதங்கள் கட்டுடைத்தலுக்கூடாக மீள் வாசிப்புக்கு உட்படுத்தப்படவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு அதி உன்னத சக்தியான இறைவனைப் போற்றும் இவ் இலக்கியங்கள் வடிவ நேர்த்தியாலும் புலப்பமில்லா ஆழ்பொருள் சிறப்பாலும் இறுக்கமான கோட்பாட்டியலுக்கூடாக தம்மை முன்னிலைப் படுத்துவன. மத அரசியலுக்கூடாக சமூக வன்முறைகளை முன்னெடுத்த சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் முதலானோர் இறையியல் என்னும் அதி மேதகு சிருஷ்டியில் தம்மை மறைத்துக் கொண்டனர். சைவ சமயத்தை தொண்டர்கள் அணுகுவதற்கு உவந்த வாழ்வியல் நெறியாக மாற்றியமைத்த இவர்களை இந்து மதம் சமயக் குரவர்களாக்க கௌரவித்தது. சங்கம வழிபாட்டுக் கூடாக சிவதொண்டர் சிவனே எனக் கருதி ஆலயங்களும் இந்து சமய நிவனங்களும் இப் புனிதர்களின் பிரதிமைகளை வழிபாட்டுப் பொருளாக்கிப் போற்றித் துதித்தன. கண்ணுக்குத் தெரிந்தும் காட்சிப்படுத்தப்படாமல் கண்ணியமான முறையில் இருட்டடிப்புச் செய்யப்படும் இவர்களின் நிஜம் அபத்த மானது. ஆராதிக்கத்தகாத அசுசியானது . ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்படோம் நடலையில்லோம் ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோமல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை’
என்னும் மறு மாற்றத்திருத்தாண்டக நாவுக்கரசர் கூற்றுக்கமைய அதிகார வர்க்க நிலைகளுக்கு எதிராக உணர்வெழுச்சியும் அனைத்து சாதிய மக்களையும் சைவசமயம் என்ற கட்டுக்குள் ஒருங்கிணைத்து போராடிய சமயக் குரவருள் முதன்மையானவர் முக்கியமானவர் சம்பந்தர் ஆவார்.திருநீலகண்ட யாழ்ப்பாணர் போன்றவர்களைத் திருக்கோயிலுக்குள் அழைத்துச் செல்வது, வேதியர் வீட்டின் நடுக் கூடத்தில் எரிந்து கொண்டிருக்கும் வேள்வி குண்டத்துக்கு அருகில் அவர்களைத் தங்கவைப்பது போன்ற பல புரட்சிகளைச் சம்பந்தர் செய்த போதிலும் சைவசித்தாந்தம் கூறும் நான் என்னும் அகந்தையையும் தான் என்னும் மமதையையும் இறுதிவரைக்கும் அறுக்காது தன்முனைப்புடன் செயற் கருமங்களை ஆற்றியவராகவே காணப்பட்டார். இதனை ‘ஆணை நமதே’ என்ற ஆளுடைய பிள்ளையாரின் அருள்வாக்கும் ‘ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தலெளிதாமே’ எனும் இவரது பிரமபுரம் மீதான பதிகமும் ‘காழியுண் ஞானசம்பந்தன் தமிழ் பத்துங் கொண்டு வைகீயிசை பாட வல்லார் குளிர் வானத்துயர்வாரே’ எனும் திருவலி தாயத்தை பாடிய பதிகமும் நினைவு கூர்ந்து நிற்கினற்து. இவரின் பெரும்பாலான பதிகங்களில் ஈற்றடி (திருக்கடைக் காப்பு) தன்னை முதன்மைப்படுத்திப் பாடுகின்ற பாடலாகவே அமைகின்றது. ‘புண்ணிய பாவம் பெருந்துமிக் கான்மியமும் மண்முதல் மாயைகாண் மாயையும் -கண்ணிய அஞ்ஞானங் காட்டுமிவ் வாணவமும் இம் மூன்றும் மெய்ஞ் ஞானிக் காக விடு’
என்னும் பாடல் ‘கண்ணிய அஞ்ஞானம்காட்டும் ஆணவம் சுட்டியறிவதாகய விபரீத உணர்வை ஆன்மாக்களுக்கு ஏற்படுத்தி மெய்யுணர்வை மறைத்து பிறவிக்கு வித்தாகும்’ எனக் கூறுகின்றது. ஆனால் பேரின்ப நெறிக்கு அப்பாற்பட்டு நான் என்னும் அகந்தையோடு இருந்த சம்பந்தருக்கு மாத்திரம் இறுதிப் பேறாகிய வீடு பேறு எவ்வாறு கைகூடியது சிவஞானபோதச் சூத்திரப்படி சிவ ஞானிகளாகிய இறை அன்பரோடு சம்பந்தர் மரீஇ இருந்தாராயினும் ஆலயங்களுக்குச் செனறு; அரனென ஆண்டவனைத் தொழுதாராயினும் அம்மலங் கழீஇ என்னும் மெய்கண்ட தேவர் கூற்றுகமைய மலத்தை நீக்கினார் இல்லை. எனவே முத்தியாகிய வீடுபேறு திருநல்லூர் பெருமணத்தில் சம்பந்தருக்கு கைகூடியது என்பது கட்டுக்கதையே அன்றில் வேறில்லை. ஆணவ மலத்தை நீக்காத சம்பந்தரை நோக்கி வானமும் நிலமும் கேட்கும் வண்ணம் இறைவன் ‘ஈனமாம் பறிவி தீர யாவரும் புகுக’ என எவ்வா கூறுவாh.; எனவே பிறவிக்குக் காரணமாகிய மலமாசை நீக்காத சம்பந்தர் ‘நாத நாம நமச்சி வாயவே’ எனக் கூறிச் சோதியில் புகுந்தது என்பது நடைமுறையில் இயல்புடைய கூற்றல்ல. ஏனெனில் ‘மேலைக்கு வருவினையே தென்னி லங்கண் விருப்புவெறுப் பெனவறியல் விளைவு மெல்லா மூலத்த வினைப்பயில்லா மென்னி னாமென் முற்றியதன் பயனுனக்கு முளைக்கு மென்பார்’
என்னும் சிவப்பிரகாசப் பாடலடி செய்வினை நுகருங்கால் விளையுமெனக் கூறுகிறது. எனவே அனுபவிக்கு பொருட்டு எஞ்சியிருக்கும் சஞ்சிதவினை விடுத்து சம்பந்தர் வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் எவ்வாறு முத்தியடைந்தார். ‘அவ்வினைக்கவ்வினை யாமென் சொல்லு மஃதவீர்’ என்னும் பாடலடியில் நாம் முற்பிறவியில் ஈட்டிய தீவினைக்கேற்ப இப்பிறவியில் பிராரத்தம் வந்தூட்டும் எனக் கூறும் சம்பந்தர்
‘கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுது நாமடியோம் செய்வினை வந்தெம்மைத் தீண்ட பெறாதிரு நீலகண்டம்’
என்னும் பாடலடியில் கைத்தொண்டு செய்து இறை கழலைப் போற்றினால் நாம் செய்தவினை நம்மைத் தீண்டாது என்பார். இவ்வெடுகோளுக்கமைய சம்மந்தர் தமக்கென ஒரு கோட்பாட்டை அமைத்து அவ்வழியில் சாமீப முத்தியை அடைந்தார் என்றே கருத வேண்டியுள்ளது.தன் முனைப்புடன் தான் என்னும் மமதையுடன் தன்னை முன்னிலைப்படுத்தும் சம்மந்தரின் செயலுக்கு பிறிதொரு உதாரணமாக திருநீலகண்டப் பெரும்பாணருடைய அன்னையார் பிறந்த ஊரான திருத் தருமபுரத்தில் யாழ்முரி பாடியதைக் கூறலாம்.சம்பந்தர் திருக்கோழம்பம் வைகல்மாடக் கோயில் முதலிய பல தலங்களைப் பணிந்து பாடித் திருத்தருமபுரத்தில் வாழும் நாளில் திருநீலகண்டப் பெரும்பாணருடைய சுற்றத்தார் திருஞான சம்பந்தரின் பதிகத்தைச் சிறந்த முறையில் பாணர் யாழிட்டு வாசிப்பதைப் புகழ்ந்து கூற அதனைச் சகியாத சம்பந்தர் இசை உலகர் கண்டத்திலும் கருவியினும் அடங்கா வண்ணம் மாதர் மடப்பிடி என்னும் திருப்பதிகத்தைத் பாடினார். யாழைக் காட்டிலும் இசையே வலிமை உடையது என்பதனால் இப் பதிகம் யாழ் முரி (முரி வலிமை) என அழைக்கப்படுகிறது. இச் செயல் ஊராரை அன்றி பாணரையும் பெரிதும் பாதித்தது. சம்பந்தர் பாட அத் திருப்பதிகத்தின் இசையை யாழில் அடக்க முடியாது தவித்த பாணர் வெய்து நடுங்கித் தன் யாழ்கருவியை உடைக்க ஓங்கினார். அச் சமயம் சம்பந்தர் பரிவு கொண்டார் போன்று அதனைத் தடுத்து ‘ஐயரே நீவிர் யாழை முறிக்கப் புகுவது எதற்கு சிவபிரானர் திருவருட் பெருமையெல்லாம் இக் கருவியில் அடங்குதல் கூடுமோ சிந்தையால் அளவு படாப் பதிகவிசை செயலளவில் எய்தா ஆதலின் நீவிர் இந்த யாழினைக் கொண்டே இறைவன் திருப்பதிக இசையினை வந்தவாறு பாடி வாசிப்பீராக’எனக் கூறி தம் கையில் உள்ள யாழை மீண்டும் கொடுத்ததாகப் பெரியபுராணம் 2354, 2355 ஆம் பாடல்கள் உரைக்கின்றன. சம்பந்தரின் இச் செயல் எவ்வகையிலும் மேலான செயலல்ல. சிந்தைக்கொவ்வா சிறுபிள்ளை ஒன்றின் செயலாகவே இற்றைவரை இது கருதப்படுகின்றது.சமணபௌத்தர்களின் ஆசார அனுஷ்டானங்களும் உலக வாழ்க்கை பற்றிய யதார்த்தமான அணுகுமுiயும் கொல்லாமை, நெறிபிறழாமை, புலால் உண்ணாமை பற்றிய உயர்ந்த கருத்துக்களும் தமிழகத்தில் செல்வாக்கு மிக்க மதமாக இவற்றைக் கட்டி யெழுப்பியதுடன் இம் மதங்களைச் சமூக அந்தஸ்து மிக்க மதங்களாக மாற்றி அமைக்கவும் கால்கோலாயின. அவமானகரமான சாதியத்துக்கெதிரான பரப்புரைகளை முன்வைத்த இம் மதங்கள் யாகங்களில் மிருகங்களைப் பலியிடுவதைக் கண்டித்ததுடன் பிராமண மதத்தின் கோட்பாடுகளையும் நிராகரித்து கேள்விக்குட்படுத்தியது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் சமூக நீதிக் கருது;துக்கூடாகவும் திருக்குறள், நாலடியார் முதலான கீழ்க்கணக்கு நூல்களுக்கூடாகவும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்களுக்கூடாகவும் தேசிய உணர்வும் சுதந்திர உணர்வும் எஞ்சியிருந்த சூழலில் சமூக அந்தஸ்தை ஓரளவுக்கு நிலைப்படுத்திக் கொண்ட இம் மதங்களை யதார்த்தமான உலக அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட இறைத்துவத்தை வலியுத்தும் இந்து சமய அமைப்புக்களால் சுலபத்தில் எதிர்கொள்ள முடியவில்லை. இம் மதங்களின் எழுச்சியைச் சகிக்க முடியாத சம்பந்தர் அம் மதங்கள் மீது காழ்ப்புக் கொண்டமை இயல்பானதே. இதனை ‘சாக்கியர் வன் சமண் கையர் மெய்யியல் தடு மாற்றத்தார்’ என்னும் இராமேஸ்வரத் தலப்பதிகம் கொண்டும் ‘சாக்கியர் சமண் படுகையர் பொய்ம் மொழி ஆக்கய உரை கொளேல்’
என்னும் திருக்கருக்குடி பதிகம் கொண்டும் அறியலாம். சமண பௌத்தர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி சம்பந்தர் பாடல்களில் வசைகளாகவும் வெளிப்படுகின்றன. குறிப்பாக இவரின் பத்தாம் பதிகங்களில் இதனைக் காணலாம். சாக்கியப் பேய்கள் (திருமழப் பாடிப் பதிகம்) என்றும் பிதற்றும் பேதையராஞ் சமண் சாக்கியரென்றும் (திருவாவ+ர்ப் பசுபதீச் சரப்பதிகம்) மாசாருடம்பர் மண்டைத் தேரரும் பேசா வண்ணம் பேசித்திரியவே (திருச் சொம்பன் பள்ளித் திருப்பதிகம்) என்னும் வசை பொழியும் சம்பந்தர் சமண பௌத்த துறவிகளின் கோலத்தை அழகுடையதும் பறிர்பால் காணாததும் அவர்க்கேயுரிய வழக்கத்தால் உரியதுமான துவரூட்டிய உடையினை உடுத்தியவர் என்றும் கூறியும் இகழ்ந்துரைப்பார். இதனை ‘செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும் படியாரும் பாவிகள் பேச்சு பயனில்லை’
என்னும் திருக்காயில் பதிகம் விளக்கி நிற்கிறது. இதனைப் போன்று இரந்து உண்டு உயிர் வாழும் பௌத்த பிக்குகளின் மேதகு நிலை ‘மாசங்கற் சமண் மண்டைக் கையர் குண்டக் குணமிலிகள்’ என்னும் பாடலில் இகழ்ந்து நோக்கப்படுகின்றது. உண்ணாது நோகப்படும் பௌத்த சமண துறவிகளின் உயரிய தவமும் சம்பந்தரால் ‘தடுக்குடைக் கையரும் சாக்கியரும் சாதியி னீங்கய வத்தவத்தார்’ எனக் கூறி இகழப்படுகிறது.கடவுள் உண்டெனக் கொள்ளாத சமணத்தில் அந்தக் கடவுளின் தானத்தில் இருக்கும் நித்திய சித்தனும் முத்தனும் பெத்தனாகிய சீவனுக்கு உதவி புரிவதில்லை. இறைவன் துணையின்றி; சீவன் தன் ஆற்றலை மட்டுமே கொண்டு முத்தி பெறுமென சமணர் கொள்வது அடிக்கிணற்றில் உள்ள வாளி இழுப்பவன் இனறி; தானாகவே மேலே வருவதை ஒக்குமெனக் கூறி சித்தாந்திகள் கண்டிப்பர். இவர்களைப் போன்று ‘மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்’ என திருநெய்து;தான பதிகத்தில் கண்டிக்கும் சம்பந்தர் நாள் தோறும் இறைவனை துதித்து அவனை நெஞ்சில் ஏற்றும் சிவனடியார்க்கு வருந்தும் நோய்கள் தாக்காது என்பார். இதனை ‘நித்தம்பயி னிமலனுரை நெய்தானமதேத்தும் சித்தமுடை யடியாருடல் சிறு நோயடையாவே’
என்னும் அடி தெளிவுபடுத்தி நிற்கிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கான அக் கருத்துக்களைக் கூறி சமண மதம் மக்களைத் தமக்குள் உள்வாங்கக் கொண்டது. அகம் புறம் என்னும் வாழ்வியல் நெறிக்குள் அகப்பட்டு துன்பத்தால் துவண்டு புரையேறிப் போன புண்பட்ட நெஞ்சுடன் வாழ்ந்த ஆன்றோருக்கு சமண பௌத்த போதனைகள் அருமருந்தாயின. மக்கள் அம் மதத்தின்பாற் ஈர்க்கப்பட்டு அலையலையாகச் சென்று மதம் மாறுவதைக் காணச்சகிக்காத சம்பந்தர் ‘வஞ்சமண தேரர் மதிகேடர் தம் மனத் தறிவிலாதவர், புத்தருந் தோகை யம் பீலிகொள் பொய்ம் மொழி பித்தரும் பேசுவ பேச்சல்ல’ எனக் கூறிக் கண்டித்து நெறியற்று குணங் குறியற்று சமணர் உரை கேட்டு நிற்கும் ஊரில் மறியேந்திய இறைவனடியே துணையாகும் என்பதை.
‘நெறியில்வரு பேராவகை நினையா நினைவொன்றை அறிவில்சம ணாதருரை கேட்டுமயராதேநெறியில் அவர் குறிகணணினை யாதே நின்றிய+ரில்மறியேந்திய கையானடி வாழ்த்துமது வாழ்த்தே’திருநின்ய+ர் பாடலடி கொண்டு விளக்குவார். எனவே வாசிதீர (வேற்றுமை நீங்க) அடியவர்க்கு வலிந்து அருள் செய்து பேணும் பெரியார் எம் மதத்தில் உள்ளனர்? இந்துமதமொன்றிலேயே உள்ளனர். எனவே அன்பற்று ஏசி இகழ்ந்துரைக்கும் புறச்சமயத்தாராகிய சமண பௌத்த சொல் கேளேல் எனக் கூறி திருவலிதாயப் பதிகத்தில் சமணர்பாற் செனற் இந்துக்களை வலிந்து இழுப்பார்.பௌத்தருக்கு எதிராக சம்பந்தர் தொடுத்த அதியுச்ச வன்முiயாகப் போதி மங்கையில் புத்தநந்தி என்னும் தேரரின் தலையில் இடி விழுந்து உடலில் இருந்து தலை துண்டாகும்படி. ‘புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறணிவார் வினைப் பகைக் கத்திர மாவன அச்செழுத்துமே’
எனும் பாடலடி பாடி அவரைக் கொனற்மையைக் கூறலாம். பரசமயக் கோளரி திருஞான சம்மந்தரின் அத்திரவாக்கினால் இடி வீழ்ந்து புத்தநந்தியின் தலை முண்டமென உடல் கூறுபட்டமையை நம்பியாண்டார் நம்பி தன் திருத்தொகையில்.
‘................................................................ நேர்வந்தபுத்தன் தலையைப் புவிமேல் புரள்வித்த வித்தகப் பாடல் விளம்பினான்’
என்னும் செய்யுள் அடிகொண்டு போற்றுவார். சேக்கிழார் சம்பந்தரின் இவ்விழிந்த செயல் தன்னை நற்செயலெனக் கருதி ‘ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலே உருமிடித்து விளப் புத்தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்கெ’ எனப் பாடித் துதிக்கிறார். ‘அறவினை யாதெனில் யாதொன்றும் கொல்லாமை கோறல்’ ‘நல்லாறு எனப்படுவது யாதெனில் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி’ எனப் பொய்யா மொழிப் புலவன் வாக்கிற்கிணங்க தமிழ் வேதமாகய திருமந்திரம். ‘கொல்லிடு குத்தென் கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக்கயிற்றாற் கட்டிச் செல்லிடு நில்லெனறு; தீவாய் நரகிடை நில்லிடுமென்று நித்துவர் தாமே’
எனக் கூறுகிறது. அஃதாவது கொல்லென்றும் எறி என்றும் குத்தென்றும் கூறி அங்கணமே செய்வித்தும் செய்துவரும் கொடியோர்களை கூற்றுவன் தன் ஏவலரூடாக வன்மையான கயிற்றில் கட்டி இடிமுழக்கம் போல் முழங்க நில்லென்று கூறி நரகடை வீழ்த்தி பொறுக்கமுடியாத பெருந் துன்பத்தை விளைவிப்பான் எனவே இன்னா செய்யாது இன் நெறி என்னும் அன்பின் நெறிப்பாற்பட்டு ஒழுகும் இந்து மதம் சம்பந் தரின் உயிர்க் கொலையை மாத்திரம் எவ்வாறு நியாயப்படுத்துகிறது. சிவநெறி ஒன்றே மெய் நெறியெனக் கொண்டு அவ்வழி நிற்பவன் உண்மைச் சிவ தொண்டன் ஆகான் இதனை சுந்தரருக்கு இறைவன் கூறுவதைப்போல் ‘பெருமையால் தம்மை ஒப்பார் பேணாலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்ம் இல்லார் அருமையாம் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்றார்’எனவரும் பாடல் உண்மை அடியார் எவர் என்பதை விளக்கிநிற்கின்றது சிவனைப் பற்றும் திருத்தொண்டர் என்னும் சிவதொண்டரின் பண்பும் இத்தகையதே ஆகும். அறநெறிதவறி மதவெறி கொண்டு ஒரு நெறிக்கமைய உயிர்க் கொலையைச் செய்த சம்பந்தரை இந்துமதம் தொண்டர்கள் தொழுவதற்குரிய அறுபத்து மூவருள் ஒருவராக வைத்துப் போவது விந்தையிலும் விந்தையானது. மெய்நெறியாகிய சிவநெறியை மாத்திரம் கருத்திற் கொண்டு அறத்திற்கு அப்பாற்பட்டு மறத்தின் கண் ஒழுகும் சம்பந்தரை ‘பவமதனை அறமாற்றும் பாங்கனில் ஓங்கிய ஞானம், உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெஞ் ஞானம் தவ முதல்வர்’ என பெரிய புராணம் போற்றித் துதிப்பது அதனிலும் விந்தையானது. இந்துத்துவம் கட்டியெழுப்பப்படும்போது அதனை எதிர்த்த அவைதீக மதங்களின் வீழ்ச்சியானது தவிர்க்கமுடியாத ஒன்றேயாகும். எனவே சம்பந்தர் வீப+தி ஒன்றைத் தவிர வேறொன்றினாலும் குணப் படுத்த முடியா வெப்பு நோயை பாண்டிய அரசனுக்கு வழங்கியமைக்கான பிரதான காரணம் யாதெனில் அரசனை மதமாற்றம் செய்யவும் அவனுக்கூடாக இந்துத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கேயாகும். தருக்கவாதினாலும் மந்திர தந்திரத்தாலும் ஏலவே சமண பௌத்தரை விரட்டிய சம்பந்தர் அனல் வாதம் புனல்வாதம் என்னும் காட்சி அளவை கொண்டும் இந்துத்துவத்தை நிறுவ முற்பட்டு அதிலும் வெற்றி கண்டார். ‘தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ்’ எனத் தொடங்கும் பாடலைப்பாடி அனல்வாதம் செய்து சமணரைத் தோல்வியடையச் செய்த சம்பந்தர் சமணரை முற்றாக அழிக்க எண்ணி புனல்வாதம் செய்தார். இவ்வாதில் சமணர்கள் தோல்வியுறும் பட்சத்தில் கழுவில் ஏற்றப்படுவார்கள் என்னும் முன் நிபந்தனையும் விதிக்கப்பட்டது. சிவனடியார் நிந்தை சிவநிந்தை செய்தநுமக்கு ஏற்ற தண்டம் இதுவோ? சிவபெருமானுடைய திருவருளினாலே நாம் வென்றோமாயின் உம்மைக் கழுவிலேற்றுவோம். என்னும் சம்பந்தரின் கூற்றை திருவிளையாடற் புராணம். ‘அடியார் பதினா றாயிர ருள்ளார் சிவனை யவமதித்தகொடியார் நீவி ருமக்கே தண்ட மிதுவோ கொன்றைமதி முடியா ரருளா லுங்களைநாம் வென்றே மாயின் மூவிலைவேவடிவா னிரைது;த கழுமுனையி லிடுவே மதுவே வழக்கென்றார்’(சமணரைக் கழுவேற்றிய படலம், பாடல் 46)
என்னும் அறுசீரடி ஆசிரிய விருத்தப் பாவடி கொண்டு அறியலாம்.தோற்றவர் வென்றவர்க்கு அடிமையாவதென்று சமணர் கூற அதனை மறுத்த சம்பந்தர் ‘இங்கே அடியார் பதினாறாயிரவர் உள்ளாராகலின் நுங்கள் அடிமை வேண்டற் பாலதன்று. உமக்கேற்ற தண்டம் இதுவன்று’ எனக் கூறுவது எங்ஙனம்? ஜீவகாருண்யமான செயலாகக் கருதப்படும். அன்பு அகத்தில் ஒளிர அறத்தின் பாற்பட்டு மன்னுயிர்க்கு நன்னயம் செய்தலே கடனென இந்துமதம் கூற அதற்கு அப்பாற்பட்டு சம்பந்தர் செய்த இப்படுபாதகச் செயலை ஒரு காலும் நியாயப்படுத்த முடியாது. இதனாலேயே சேக்கிழார் தன் பெரியபுராணத்தில் ‘இவ்வாதிலே தோற்தவர் செய்வது இன்ன தென்பதனை ஒட்டி வாது செய்யவேண்டும்’ என குலச்சிறையார் கூறுவதாகவும் அதற்குச் சமணர் வாய் சோர்ந்து தாமே தனி வாதி லழிந்தோ வாகல் வெங்கழு வேற்று வாணி வேந்தனே யென்று கூறுவதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தர் கீர்த்திக்குப் பங்கம் விளையாவண்ணம் இக் கூற்றை சேக்கிழார் முன்வைப்பது இந்துத்துவத்தின் பொருட்டு சம்பந்தரை புனித புருஷராக்கி காப்பதற்கே அனறி; பிறிதொன்றி;ல்லை. ‘குழுவா யெதிர்ந்த வுறிக்கைப் பறிதலைக் குண்டர் தங்கள் கழுவாவுடலம் கழுவின வாக்கிய கபகமே’
என்னும் ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி 28 ஆம் பாடலடி சேக்கிழார் கூற்றை மறுத்து திருஞானசம்பந்தப்பிள்ளையாரே சமணர்களைக் கழுவில் ஏற்றியதாகக் கூறும். ஆயினும் சேக்கிழார் கூற்றுக்கு இயைந்தாற்போல்.
‘தம்பால் தோல்வியுற்ற சமணர்கள் கழுவிலேறி உயிர் விடாதபடி அவர்களை ஞானசம்பந்தர் தடுத்து அருளி னாரென்றும் சாவாயினும் வாது செய்யும் இயல்புடைய சமணர்கள் தாங்களே கழுவிலேறி உயிர் துந்தனர்’
என்று பெரும் பற்றிப் புலிய+ர் நம்பி கூறுவார். எவரெவர் எவ்வாறு கூறினாராயினும் ‘கொன்றிலாரைக் கொலச்சொலிக் கூறினார், இற்பிறந் தேழ்நரகு’ என்னும் திருமந்திரப் பாடலடிக்கிணங்க கொல்லும் கருத்தும் ஆற்றலும் இல்லா சமணரைக் கொல்லும் படி சொல்லியும் துணை நின்றும் தூண்டியவருமான சம்பந்தர் ஏழ் நரகிடை வீழ்ந்து துன்பமுவேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.இதனைவிட மிகக் கொடியதாகத் திருவிளையாடற் புராணத்தில் கழுவில் சமணர்கள் ஏற்றப்படுவது பாடப்படுகிறது. குலச்சிறையார் தச்சர் பலரைக் கூட்டி வைரமுடைய நீண்ட முதிர்ந்த மரங்களில் சூலவடிவாய் கழுக்களை நிறுத்தியதை ‘தச்சர் பலரை தொகுவித்துக் காழி நெடிய பழு மரத்தில் சூலவடிவாய்க் கழுநிறுவி’ என்னும் பாடலடிக்கூடாக எடுத்துரைக்கும் திருவிளையாடற் புராணம் சமணரின் உடல்களை பருந்துகள், காக்கைகள், நரிகள், நாய்கள் கௌவிப்பத் தின்னும் காட்சியை மெய்யுறையும் வண்ணம்
‘..................................................................... மடிந்தோர் யாருஞ்சுற்றிய சேனங் காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப்புற்றிநின் நீர்த்துத் தின்னக் கடந்தனர்’
எனப் பாடிட பெரியபுராணமோ இதற்கு எதிர்மாக கழுவிலேற்ற நிறுத்தப்பட்ட தம்பங்களை
‘தோற்றவர் கழுவில் ஏற்றித் தோற்றிட தோற்றுந் தம்பம் ஆற்றிடை அமணரோலை அழிவினால் ஆர்த்ததம்பம்வேற்றொரு தெய்வமின்மை விளங்கிய பதாகைத் தம்பம்போற்று சீர் பிள்ளையார் தம் புகழ்ச் சயத் தம்பமாகும்’
எனப் போற்றிப் புகழ்கிறது. அன்பு, அகிம்சை, ஜீவகாருண்யம் என ஒழுக்கத்தைப் போதிக்கும் இந்துமதம் ஈவிரக்கமற்று துடிக்கத்துடிக்க சமணர்களை வதைத்து கொடூர மாகப் படுகொலை செய்த தம்பங்களை சிவபெருமானையனறி; வேறொரு தெய்வம் இல்லை என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திக் காட்டும் கொடித்தம்பங்களாகவும் திருஞானசம்பந்தன் புகழை உலகுக்கு எடுத்துக்காட்டும் வெற்றித் தம்பங்களாகவும் நின்றன என எவ்வாறு பாடும்? அருள் நூலென்றும் அன்பால் விளைந்த அமுதசுரபி என்றும் படிக்குந் தோறும் பயன் நல்கி மனித இனத்தை உயர்த்தி உய்விக்கும் நூல் என்றும் சிறப்பிக்கப்படும் பெரியபுராணம் அறத்திகு அப்பாற்பட்டு உயிர்க் கொலையைப் புகழ்ந்துரைப்பது நன்றன்று. சிவநிந்தை செய்பவனின் சிந்தைதனை மாற்றி அவனை சிவநெறியின் பாற்பட்டு ஒழுகச் செய்தலே தர்மம். அதனை விடுத்து அவனைக் கொல்வது அதர்மமே அனறி; தர்மம் ஆகாது.அன்பும் சிவமும் இரண்டு என்பதை மறுத்து அன்பைச் சிவமாகக் கொள்வதே சைவநெறி. அன்பாகிய வித்தே சிவமாய் விளைந்து பேரின்பமாகிய வீடுபேற்றைத் தரும். அளவில்லாப் பேரன்பும் அப்பழுக்கில்லா அறமும் பேதமற்று ஒன்றற நிற்கும் அருள் நெறியான சைவநெறிக்கு மாசு கற்பிப்பது முறைமையன்று. ஆனால் மதத்தின் பெயரில் புனிதராகப் பிரதிஷ்டை செய்யப்படும் பிரதிமைகளை உடைத்து வெளி யுலகுக்கு அம்பலப்படுத்துவது மனிதநேயச் செயலாகும். இந்துத்துவத்தின் பெயரால் பண்பாட்டு அடையாளங்களை அழித்து வர்ணாச்சிர தர்மத்தை உயர்த்திப் பிடித்து மதவெறி கொண்டு அலையும் போலிமைகளின் அபத்த விம்பம் விரிந்த தளத்தில் தூல நோக்கோடு பன்முக வாசிப்புக்கு உட்படுது;தப்பட வேண்டியவை. மரபுக்குள் ஒளிந்திருக்கும் பகுத்தறிவற்ற மூட நம்பிக்கைகளை ஒழித்தல், படைப்பின் புனிதத்துவத்தை மறு வாசிப்புக்கு உட்படுத்தல், மக்களிடம் நிறைந்துள்ள எதிர்மரபுக் கூறுகளைத் தேடுதல், ஒழுங்கமைவுகளைச் சிதைத்தல் போன்றவற்றை உண்மையான நவீனமயமாதலாகக் கொண்டு ஆய்வுகள் முன்னெடுக்கப்படுமானால் அவை தமிழ் இலக்கியத்தை உரம் பெற்று வளம்பெறச் செய்யும். .
புனிதத்துக்குள் கட்டுறுறும் அபத்தத்தின் முகம் புனிதத்துக்குள் கட்டுறுறும் அபத்தத்தின் முகம் Reviewed by மறுபாதி on 9:41 AM Rating: 5

No comments:

Powered by Blogger.