$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

பெண்ணியாவின்“இது நதியின் நாள்“


மருதம் கேதீஸ்

தொண்ணூறுகளின் நடுப்பகுதியிலிருந்து எழுதிவரும் பெண்ணியா, இதுவரை “என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை“ மற்றும் “இது நதியின் நாள்“ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்களை வெளி யிட்டிருக்கிறார்.

‘இது நதியின் நாள்’ கவிதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டு, மார்கழி மாதம் வெளி வந்திருக்கிறது. இத்தொகுப்பில் காணப்படும் அதிகமான கவிதைகள் 2007-2008 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரை இந்தக் காலப் பகுதி யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக் குண்டிருந்தமையால் இங்கு வாழ்ந்த எல்லா இன மக்களும் ஏதோ ஒரு வகையில் அதன் பாதிப்புக்குட்பட்டேயிருந்தனர். ஆதலால் இக் காலப் பகுதியில் எழுந்த அதிகமான படைப் புக்களில் அதைப் பற்றிய பதிவுகள் உள் ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு மாறாகப் பெண்ணியாவின் கவிதைகள் இதி னின்றும் விடுபட்டுத் தனி மனித நெகிழ்வு கள், உடைவுகள், வலிகள், இயலாமை பற் றியே தன்னை அதிகமும் வெளிப்படுத்துகின் றன. தவிரவும் பெரும்பாலான கவிதைகள் பெண் மொழி பேசுபவையாகத் தம்மை இனங்காட்டுகின்றன.
‘கயல்விழி விரிந்த தோள்’ எனும் கவி தையில் ‘படுக்கை விரிப்பைச் சரிசெய்வதையும்/புதிய சமையலைக் கண்டுபிடிப்பதையும் விட / இந்த உலகம் விரிவதே இல்லை’ என்று மிகவும் எளிமையான புழங்கும் வார்த்தைகளால் தன்னைச் சுற்றியுள்ள சமூ கத்தின் மீது உள்ள வெறுப்பையும் சினத்தை யும் வெளிப்படுத்தி நிற்கின்றார். மநிகழ்தல்டு, ‘அரசியாகும் ஓர் கழுகு’, ‘பூக்கள்’ எனத் தொடரும் இவருடைய ஒரு சில கவிதைகளை வாசித்துணர்கையில் பெண்களின் நெருக்கடியான பொழுதுகளைப் பேசுவ தோடு ஆண் உறவுகள் மீதான கேள்விக ளோடும் அவையுள்ளன.பெண்ணியாவின் பெரும்பாலான கவி தைகள் ஒற்றைப் பரிமாணத் தன்மையுடன் தமது அகலிப்பை நிறுத்திக் கொள்கின்றன. மவெளிப்படுத்தல்டு எனும் கவிதையில்
‘இரவினில் நீ
இரைந்து கத்துகிறாய்
பகல்களையும்
விட்டுவிடாமல்
உன்
அவதூறு கொண்டு
அலங்கரிக்கத் தொடங்குகிறாய்...’

என்று கவிதையின் ஆரம்பத்திலேயே பேச்சு மொழிச் சாயல் பூசப்பட்டு அது தன்னை நெகிழ்த்திக் கொள்வதால் கவிதை பலமின்றிப்போய்விடுகிறது. இறுதியில்

‘இதற்கெல்லாம் பதிலாய்
அவள் தன்னை
ஆழ்ந்த மெளனத்தில்
வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள்’

எனக் கவிதையின் முடிவில் பெண் ணியா தனக்கான அவதானிப்பை வெற்றி கரமாகத் தக்கவைத்துக் கொள்கிறார். இது போன்றே மகாதல், நீலமான இரவுடு எனும் கவிதையிலும் பெண்ணியாவின் ஆளுமை சுயம் பேசுதல் எனும் வகை பாகத்தினூடாக வெளிப்படுகிறது.

‘ஆண்மை வழியும் இரவில்
இராப்பிச்சைக்காரனின்
கெஞ்சலும் தோற்றமும் மிகைப்பட
கையேந்துகிறாய் ஒரு இரவுக்காக...’
என்று தன்னுடைய பிறிதொரு கவிதை யில் அந்தரங்கங்களையும் கூட விட்டுவைக் காமல் பேசியிருக்கிறார். அனார், பகிமாஜ ஹான், சலனி போன்ற ஏனைய கவிஞர்க ளோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் பெண்ணியா வின் கவிதைகள் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான, தீவிரமான குரலாக வெளிப்படுகி றது எனலாம்.

‘இரவுநேரத் தொழிலாளி தன் பங்கிற்கு / இரவினில் எழுகிறான் / மரங்களை வெட்டுகி றான்/ அவர்களுக்கான உணவினையும் / கூலியின்றிச் சமைக்கிறான்...’ இவ்வாறு தொடர்ந்து செல்லும் வரிவார்த்தைகள் இறுதி யில் மதனக்காக ஒருநிமிடம் தானும் / ஒதுக்க முடியாத தொழிலாளி / எதற்காய் தொழில் புரிகிறான்...?’ எனத் தன்னை எதிர்ப்பால் நிலையில் உருவகித்து எதுவுமற்றுப் போகின்ற வாழ்க்கையினை உணரவைக்கி றார். பெண்ணியாவிற்கு இந்தக் கவிதை தனக்கான ஓர் ஆறுதல் நிலையைத்தர லாம். உலகில் எத்தனையோ தாய்மார்கள் இரவு நேரத் தொழிலாளிகளாகவே வாழ்ந்து வாழ்வை நிறைவும் செய்திருக்கிறார்கள் என் பது உண்மையே.


‘என் குழந்தை ஓவியம்’ என்னும் பெண் ணியாவின் கவிதை அவருக்குக் கைவரப் பட்ட ஓர் கவிதையாக வெளிப்படுகிறது. உண் மையில் கவிதை, எழுதுவதற்கான ஓர் படைப் புக்கலையல்ல; அது அனுபவங்களால் தன் னைக் கட்டிக்கொள்கிறது அல்லது செய்யப் படுகிறது என்றேதான் கூறவேண்டும். ஏனெ னில் கவிதையுணர்வு எல்லோருக்கும் வாய்த்துவிடும் ஒன்றல்ல. அது பல தடவை கள் கவிஞர்களையே ஏமாற்றியும்விடுகிறது. ( மேற்படி கவிதையில் குழந்தை பற்றிய செய லுணர்வுகளை நம்மில் தொற்றவைத்தா லும்)

‘தனித்த இடைவெளியில்
அவன் வரைந்த சுவர் ஓவியங்களின்
உருவங்கள் இறங்கிவந்து
அவனை ஒத்த பாவனைகள் செய்து
தங்கள் தங்களின் இடங்களில் உறைகின்றன.
என் வீடு முழுக்க
ஒரு குழந்தையால் நிரப்பப்பட்டிருக்கிறது.’

எனும் இந்த வரிகளில் கவிதையில் மமெளனம்டு என்று சொல்லப்படுகின்ற உச்ச நிலை வெளிப்படுகிறது.

இதுபோன்ற பெண்ணியாவின் அனேக மான கவிதைகளில் குறிப்பிட்ட வரிகள் கவி தையின் நுண்ணுணர்வை வெளிப்படுத்து கின்றன எனலாம்.

பெண்ணியாவைப் பற்றிச் சலனி குறிப் பிடும்போது மஇந்தச் சமூகம் பெண்ணுக் கென வழங்கியிருக்கும் வாழ்வை நன்கறி வேன். இதற்குப் பெண்ணியாவும் நானும் எனது நண்பிகளும் விதிவிலக்கானவர்கள் அல்ல. எனவே இந்த வாழ்வு, சமூகப்போக்கு மீது பெண்ணியா ஆற்றும் எதிர்வினை என் னுடையதும்தான்டு எனக் குறிப்பிடுகிறார்.

ஒரு சமூகத்தின் மீது எதிர்வினையாற்று தல் என்பது அதனுடைய பல பாகங்களையும் பல பரிமாணத்தன்மையில் நோக்குத லையே கொண்டிருத்தல் வேண்டும். தவிர எதிர்வினையாற்றலால் நாம் சாதித்துக் கொள்பவை யதார்த்தத்தில் பெரும் வெற்றி டமாகவே இருந்தும் விடுகிறது. இது கூர்ந்து நோக்கப்படவும் வேண்டிது. ஆண் ஒடுக்குற வுக்கு எதிராக அல்லது ஆண்வெறுப்புணர் வைப் பேசும் பெண்மொழிகள் பெரும் துக் கத்துக்குரியதாகவே இருந்து விடுகின்றது. ஏனெனில் குறித்த கவிஞர்கள் / படைப்புணர் கள் இதற்குப் பின் வாழ்வை எதிர்கொள்தல் என்பது பெரும் போராட்டங்களூடே அமைந்தும் விடுகின்றது. பெண்ணியா தனது எல்லாக் கவிதைகளுக்கும் அப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதற்கு அப்பாலும் அவர் செல்லவேண்டிய பாதை இருந்து கொண்டேயிருக்கிறது
பெண்ணியாவின்“இது நதியின் நாள்“ பெண்ணியாவின்“இது நதியின் நாள்“ Reviewed by மறுபாதி on 9:40 AM Rating: 5

No comments:

Powered by Blogger.