$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

நடுநிசிப் பொம்மைகள்

தானா விஷ்ணு

நடு நிசிகளில்

பொம்மைகள் அச்சம் கொண்டெழுகின்றன

அவைகளின் விழிகளுள் படர்கின்றன

உதிர்ந்து கிடக்கும் மிரட்டும் விழிகள்

பொம்மைகள் சிரித்துப் பேசும்

மனநிலையில் இருப்பதில்லை

மிரட்டும் விழிகள்

ஆணியடிக்கின்றன அதன் அடி மனதில்

எப்போதும் அறையின்

ஏதாவதொரு மூலையில்

மெளனமாய் முகத்தில் சோகம் நிரம்ப

அம்மணமாக சிலவேளை உறங்குகின்றன

அல்லது விழித்திருக்கின்றன.

பொம்மைகள் விழித்திருக்கும் போதும்

அல்லது உறங்கும் போதும்

அவற்றின் விழிகள் கொடூரமான மிருகமொன்றினதாகவோ

கொடூரமான மனிதனொருவனுடையதாகவோ

தம் அடையாளம் காட்டுகின்றன.

அறையின் மத்தியில்

உதிர்ந்து கிடக்கும் விழிகள்

நினைவில் வரும் போதெல்லாம்

பொம்மைகள்

தமது முகங்களை கண்ணாடியில் பார்ப்பதற்கு

அச்சப்படுகின்றன அல்லது வெறுக்கின்றன.

நடுநிசிப் பொம்மைகள் நடுநிசிப் பொம்மைகள் Reviewed by மறுபாதி on 9:18 AM Rating: 5

No comments:

Powered by Blogger.