$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

விமலாதாஸ் கவிதைகள்

01

அதிகாலை

வானம் இருண்டிருந்தது

சூரியனைக் காணவில்லை

காற்று வீசத் தயங்கியது

வீதியயங்கும்

ஆழ்ந்த அமைதி

எல்லாமும்

எல்லாமுமாய் இருந்த

எங்கள் இறுதிப் பயணம்

விடையளிக்கமுடியா

விழிகளுடன் நான்

விருப்பமின்றி நீ

போக மறுத்த இதயம்

வெடித்துச் சிதறியது.

02

உண்ணாமல்

ஒருவித ஒலியுடன்

அங்குமிங்கும்

ஓடிக்கொண்டிருக்கிறது

பிரியத்துக்குரிய உன் நாய்

நேற்று மாலை

களற்றிப் போட்ட உடுப்புக்களில்

மணக்கிறது உன் வாசம்

சீர் செய்யப்படாத படுக்கை

துவாயில் இன்னும் வியர்வை ஈரம்

இறுதிக் கிரியைக்காக

அஸ்தி

வீட்டின் மூலையில்

புதைக்கபட்டுவிட்டது.

விமலாதாஸ் கவிதைகள் விமலாதாஸ் கவிதைகள் Reviewed by மறுபாதி on 8:58 AM Rating: 5

No comments:

Powered by Blogger.