$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

கபீர் கவிதைகள்

ஆங்கலம் வழி தமிழில்: திசையுக்கரசிங்கன்


மாயையும் யதார்த்தமும்

எது பார்க்கப்பட்டதோ அது உண்மையில்லை
எதுவோ அது சொல்லப்படவில்லை
நம்பிக்கை வாhத்தைகள் இன்றிப் புரிவதும்
பார்க்கப்படாமல் வருவதுமாகும்
புறக்கணிப்பு நோக்கிய அறிவுடைப்பட்டுணர்வின் முழுமை
ஆனால், எவ்வளவு அதிசயம்
வடிவமற்ற கடவுளை வணங்குவர் சிலர்
அவரது பல்வேறு வடிவங்களை வழிபடுவர் சிலர்
எல்லாவித கபிதங்களுக்கும் அப்பால் உள்ளார் அவர்
இசையை எழுதமுடியாது என
அறிபவன் மட்டுமே அறிவான்
அதற்கப்புறம் ஸ்வரத்தினை மட்டும்
கபீர் கூறுகிறான் விழிப்பு ஒனறு; மட்டுமே
மாயையைத் தாண்டுமேன்
0

என் தேகத்தினுள் நிலவு

என் தேகத்தினுள் பிரகாசிக்கிறது நிலவு
என் குருட்டு விழிகளோ காண்பதில்லை
என்னுள்ளே நிலவாதலால் சூரியனும்....
முடிவின்மையின் தடையற்ற பறை ஒலிக்கிறது என்னுள்
ஆனால், என் செவிட்டுக் காதுகளோ கேட்பதில்லை

நான் எனது என்பதற்காய் கூக்குரலிடுகிறான் நெடுங்காலமாய் மனிதன்
அவனது காரியங்களோ எதுவும் அற்றவை
எப்போது நான், எனது மீதான பிடிப்பு இறக்கிறதோ
அப்போது நிறைவேறும் கடவுளின் காரியம்
அறிவெய்தல் என்பதற்கப்பால்
காரிய இலக்கென வேறில்லை
எப்போது நிகழ்கிறதோ அது
அப்போது போய்விடும் காரியமாற்றலும்
பூ கனிக்காக மலர்கிறது கனியெப்போது வருகின்றதோ போய்விடுகின்றது
பூ அப்போது
மானுள் உள்ளது கஸ்தூரி, தன்னுள் ஆராயாமல் புற்களை நாடியலைகின்றது அது
0
கபீர் கவிதைகள் கபீர் கவிதைகள் Reviewed by மறுபாதி on 10:43 AM Rating: 5

No comments:

Powered by Blogger.