$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

கடிதங்கள்

கவிதைக்கான காலாண்டு இதழாக மொட்டவிழ்ந்த மறுபாதியே நீ கவி தைக்கானவன் என்றாலும் உன்னுள் ஓடும் கட்டுரை நாடிகளும் என்னைக் கவர்ந்தவை. அதிலும் புனிதத்துக்குள் கட்டுறும் அபத்தத்தின் முகம் என்ற வெள்ளைமாரனார் கட்டுரை மேலும் சிறப்பானது. புனித மான எமது நெறியில் களையோடி உள்ள இவை போன்றகளைப் பயிர் களை அறிஞர்கள் தெளிவித்து புலப்படுத்துவது எமது நெறிக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் மறுபாதி டஉன் நிறை உன் விலையை விட அதிகம். இது உன்னை முத்தமிட்டவருக்கு புரியும். மறுபாதியே உன் ஒவ் வொரு பாதியையும் தவறாது தவழவிடுவாயாக. அடுத்தவனை எதிர் பார்த்து.....


ஜீவா
புலோலி தென்மேற்கு


கலை உலகில் ஏற்பட்டு வரும் மாறுதல்களின் ஆரோக்கிய மான பகைப் புலத்தில் கவி தைக்கான தனித்துவமான சஞ் சிகைகளின் வருகை முதன்மை பெறுகின்றது. இவ்வகையில் நடுகையினைத் தொடர்ந்து கலை உலகில் வெளிக்கிளம்பிய மறுபாதிஎனும் கவிதைக்கான இதழின் வருகை மகிழ்ச்சிக் குரியதாக உள்ளது.
வாசிப்புப் பழக்கம் அருகிவிட்டது. அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்று பேச்சளவில் மட்டும் மார்தட்டிக் கொண்டிருப்ப வர்கள் மத்தியில் செயல்நிலை செயற்பாட்டுடன் இயங்குகின்ற கலைஞர்களின் உற்பத்தியாக இவ்விதழின் வெளிப்பாடு அமை கின்றது.
இவ்விதழில் உள்ளடக்கப்பட்டிருந்த கவிதைகள், கட்டுரைகள், ஆரோக்கியமானவையாக அமைகின்றன. எனவே இவ்விதழின் தொடர்ச்சியான வருகை வாசிப்பியல் சார்ந்தும் எழுத்தி யல் சார்ந்தும் மாறுதல்களை ஏற்படுத்தும்.

எஸ்.ரி. அருள்
மல்லாகம்.



அடுத்த மறுபாதிக்காகக் காத்திருக்கிறேன். சமய உணர்வுகளைப் புண்படுத்தாததாயும் காத்திரமானதாயும் அடுத்த இதழ் மலரட்டும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

தி. மயூரகிரி
நீர்வேலி
.
கடிதங்கள் கடிதங்கள் Reviewed by மறுபாதி on 9:21 AM Rating: 5

No comments:

Powered by Blogger.