உடுத்திக் கொள்வதற்கு என்னிடம் வேறு ஆடைகள் இல்லை பறவைகள் உதிர்த்த சிறகுகளைத் தவிர சிறகுகளில் நூல் உருவி ஆடைகளை நெய்யலாம் என முனைகையில் நினைவில் வந்துபோகிறது நினைவு தவறிய ஒரு பறவையின் அழுகுரல்
No comments: