$வெளிவந்துவிட்டது ”மறுபாதி”யின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ்- மொழியாக்கக் கவிதைகளுக்கான சிறப்பிதழாக- தொடர்புகளுக்கு- marupaathy@gmail.com,தொலைபேசி-0094213008806$
மறுபாதி இதழ் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம். தொடர்புகளுக்கு -marupaathy@gmail.com தொலைபேசி-00212053751

அ. யுகசேனனின் கவிதை

உடுத்திக் கொள்வதற்கு

என்னிடம்

வேறு ஆடைகள் இல்லை

பறவைகள் உதிர்த்த

சிறகுகளைத் தவிர

சிறகுகளில்

நூல் உருவி

ஆடைகளை நெய்யலாம்

என முனைகையில்

நினைவில் வந்துபோகிறது

நினைவு தவறிய

ஒரு பறவையின் அழுகுரல்

அ. யுகசேனனின் கவிதை அ. யுகசேனனின் கவிதை Reviewed by மறுபாதி on 9:33 AM Rating: 5

No comments:

Powered by Blogger.